இலங்கைசெய்திகள்

40 “சிபெட்கோ” எரிபொருள் நிலையங்களுக்கான தடை நீக்கம்!!

Fuel

QR விதிமுறைகளை மீறி எரிபொருள் விற்பனை செய்ததற்காக தடை செய்யப்பட்ட 40 சிபெட்கோ எரிபொருள் நிலையங்களுக்கு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (12) முதல் எரிபொருள் விநியோகம் செய்யப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குறித்த எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு ஒரு வாரத்திற்கு மாத்திரமே தடை விதிக்கப்பட்டதாக தெரிவித்த அவர், எதிர்வரும் 11ஆம் திகதி வாரம் நிறைவடையவுள்ளதால் 12ஆம் திகதி முதல் எரிபொருள் விநியோகத்திற்கான அனுமதி வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button