![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/07/22-62d39f785525d.jpeg?resize=600%2C400&ssl=1)
இலங்கையில் நடமாடும் எரிபொருள் நிரப்பு சேவையை அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பரீட்சாத்தமாக ஆரம்பிக்கப்பட்ட இந்தச் சேவையின் ஊடாக, முதற்கட்டமாக முச்சக்கர வண்டிகள் மற்றும் மின் பிறப்பாக்கிகளுக்கு எரிபொருள் வழங்க எதிர்பார்க்கப்படுவதாக மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து வெகு தொலைவில் உள்ள திறந்த வெளி இடங்களில் இந்தச் சேவை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும்
எதிர்காலத்தில் உந்துருளிகள் , கலன்களிலும் எரிபொருள் வழங்க முடியும் எனவும் அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.