இலங்கைசெய்திகள்

இறந்தும் இருவருக்கு பார்வை கொடுத்த மாணவன்!!

Eye donation

விபத்தில் உயிரிழந்த மாணவனால் இருவர் பார்வை பெற்ற சம்பவம் ஒன்று தற்போது இடம்பெற்றுள்ளது. அதாவது அனுராதபுரத்தில் விபத்தில் சிக்கி உயிரிழந்த 16 வயதுடைய பாடசாலை மாணவன் மூலம் இரு இளைஞர்கள் பார்வைபெற்றுள்ளனர்.

மேலும் தெரியவருவது, கடந்த மே 31ஆம் திகதி கலென்பிந்துனுவெவ, கெட்டலாவ பகுதியைச் சேர்ந்த தக்ஷித இமேஷ் தனபால என்ற மாணவன் விபத்தில் சிக்கியபோது மூளைச்சாவடைந்து உயிரிழந்துள்ளார். இவரது கண்களைத் தானம் செய்ய பெற்றோர் சம்மதித்ததனால் அவரது கண்களில் இருந்து அகற்றப்பட்ட விழிவெண்படலம் உடனடியாக கொழும்பில் உள்ள கண் தான தலைமையகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் கொழும்பில் இரண்டு இளைஞர்களுக்கு விழிவெண்படல மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அவர்கள் பார்வையைப் பெற்றுள்ளனர். உயிரிழந்த மாணவனின் இறுதிக்கிரியைக்கு முன்னரே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மகனின் கண்களைத் தானம் செய்த பெற்றோரின் முன்மாதிரியான செயலைப் பாராட்டுவதுடன் இறந்த மாணவனுக்கு பலரும் தமது அஞ்சலிகளைச் செலுத்தியுள்ளனர்.

இலங்கையில் நூற்றுக்கணக்கான நோயாளிகள் விழிவெண்படல ஒட்டுதலுக்காகக் காத்திருப்பதாகவும், இந்த முறையில் கண் தானம் செய்வது ஒரு உன்னத செயல் என்றும் அநுராதபுரம் கிளையில் உள்ள கண் தான சங்கத்தின் பொறுப்பதிகாரி டபிள்யூ.எம்.எஸ்.சந்தன தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button