உலகம்செய்திகள்

நாயாக மாறிய ஜப்பானிய நபர்!!

dog

நபர் ஒருவரின் வித்தியாசமான ஆசை பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஐப்பானைச் சேர்ந்த டோகோ என்ற நபர் நாயாக மாறியுள்ள சம்பவம் தான் பெரும் ஆச்சரியமே.

சிறுவயது முதல் விலங்குகளின் வாழ்க்கையை வாழ விரும்புவதாகவும், நாய்கள் மீது மிகுந்த அன்பு கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ள அவர்,

தனது தோற்றத்தை மாற்ற 11 இலட்சம் ரூபாய் செலவு செய்து இருக்கிறார். இதற்காக ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் வொர்க்ஷாப் Zeppet என்ற நிறுவனத்தை அணுகி தோற்றத்தை மாற்றியுள்ளார்.

இவரை அவரது குடும்பத்தினர்கள் கூட கண்டுப்பிடிக்க முடியவில்லையாம். அந்த அளவுக்கு மிக தத்ரூபமாக அவரை நாயாக மாற்றியுள்ளனர்.

நாய் ஆடையை உருவாக்க அதிக முயச்சித்ததாகவும் அதன்படி, டோகோவின் ஆர்வத்தைப் பூர்த்தி செய்ய, செயற்கை ரோமங்கள் பட்டறையில் பயன்படுத்தப்பட்டடு 40 நாட்களுக்குப் பிறகு, இந்த ஆடை தயாராகியது என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது..
இதனைத் தொடர்ந்து டோகோ அதை அணிந்து தனது படங்களை ருவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button