Breaking Newsஇலங்கைசெய்திகள்

மாணவர்கள் நலன் கருதி மின்வெட்டுக்குத் தடை!!

Doesn't power cut

க.பொ.த உயர் தரப் பரீட்சைக் காலத்தில் மின் துண்டிப்பு இடம்பெறாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகள், எதிர்வரும் 23ஆம் திகதி முதல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ளநிலையில், 

உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலப் பகுதியில் நாளாந்த மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என அதிகாரிகள் தமக்கு அறிவித்துள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தமது திணைக்களத்தினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, மின்சார சபை உள்ளிட்ட உரிய அதிகாரிகள் இணக்கம் தெரிவித்துள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button