இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

வளிமண்டலவியல் திணைக்களத்தின் இன்றைய அறிவிப்பு!!

Department of Meteorology

மாத்தளை மாவட்டத்திலும் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

மேல்இ சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் காலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

மற்றைய பிரதேசங்களில் சீரான வானிலை நிலவும் என அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கோரியுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button