இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

வேகமாகப் பரவும் டெங்கு – சிறுவர்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!!

Dengue

டெங்கு நோயின் அறிகுறிகள் தென்பட்டால் பெற்றோர்கள் உடனடியாக குழந்தைகளை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா கோரிக்கை விடுத்துள்ளார்.

அறிகுறிகள் இருந்தும் தாமதமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டால் ஆபத்தான பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குழந்தைகளை, குறைந்த பட்சம், மருத்துவமனைகளின் வெளிநோயாளர் பிரிவுகளுக்காவது அழைத்துச் சென்று மருத்துவ ஆலோசனைகளைப் பெறுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

அதேவேளை நாட்டில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட சுமார் நாற்பது சிறுவர்கள் தற்போது கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Related Articles

Leave a Reply

Back to top button