இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

Dengue

டெங்கு வைரஸின் அறிகுறிகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு சந்தேகம் வெளியிட்டுள்ளது.

இதன் காரணமாக 24 மணித்தியாலங்களுக்கு மேல் நோய் அறிகுறிகள் காணப்படுமாயின் வைத்தியரின் உதவியை நாடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 9 ஆயிரத்து 609 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 50 சதவீதமானோர் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளனர்.

இதற்கமைய,இலங்கையில் கோவிட் தொற்றை போன்று டெங்கு தொற்றும் அதிகரித்துள்ளதாக சீமாட்டி ரிட்ஜே மருத்துவமனை அறிவித்துள்ளது.

எனவே காய்ச்சல் மற்றும் ஏனைய குணங்குறிகளால் பாதிக்கப்படுபவர்கள், குருதி அணுக்களின் எண்ணி்க்கை தொடர்பில் வைத்திய ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button