இலங்கைசெய்திகள்

கால்வாயிலிருந்து ஆணின் சடலம் மீட்பு – பொரளையில் சம்பவம்!!

death

நேற்று (30)பொரளை பிரதேசத்திலிருந்து சடலமொன்று மீட்கப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

பொரளை, லேக் ட்ரைவ் வீதியிலுள்ள கால்வாயொன்றிலிருந்து மீட்கப்பட்ட குறித்த சடலம் ஆண் ஒருவரினுடையது என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

உயிரிழந்த நபர் தொடர்பான விபரங்கள் தெரியவராத அதேவேளை, பொரளை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Back to top button