இலங்கைசெய்திகள்

வவுனியாவில் கிணற்றிலிருந்து குடும்பஸ்தரின் சடலம் மீட்பு!!

death

வவுனியா நெளுக்குளம் சாம்பல்தோட்டம் பகுதி கிணறு ஒன்றிலிருந்து குடும்பஸ்தர் ஒருவர் . நேற்று இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .
 இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில் வவுனியா சாம்பல்தோட்டம் பகுதியில் வசித்து வரும் ரமேஸ் வயது . 34 இரண்டு பிள்ளைகளின் தந்தை வவுனியா தெற்கு தமிழ் பிரதேசபையில் சிற்றுாழியராக கடமையாற்றி வருகின்றார் நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மரணச்சடங்கு  ஒன்றிற்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய இவர் . இரவு 8 மணியளவில் குளித்துவிட்டு வருவதாக வீட்டிலுள்ள வயல் கிணற்றுக்குச் சென்றுள்ளார் . எனினும் பல நேரமாகியும் அவர் அங்கிருந்து திரும்பிவரவில்லை தேடிப்பார்த்தபோது அவரைக்கண்டு பிடிக்க முடியவில்லை . அயலவர்களின் , உதவியுடன் கிணற்றில் தேடியபோதும் தெரியவில்லை கிணற்றிலிருந்த நீர் 3மேலதிக தண்ணீர் இறைக்கும் இயந்திரத்தின் உதவியுடன் இறைக்கப்பட்ட நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் குறித்த குடும்பஸ்தரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . இவருக்கு வலிப்பு ஏற்படுவதாகவும் குளித்துக்கொண்டிருந்தபோது . வலிப்பு ஏற்பட்டு கிணற்றிற்குள் தவறி வீழ்ந்திருக்கலாம் என்று ஆரம்ப விசாரணையில் தெரியவருகின்றது . சடலம் நேற்று இரவு வவுனியா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. நெளுக்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button