இலங்கைசெய்திகள்

முல்லைத்தீவில் சிறுமி சடலமாக மீட்பு!!

death

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூங்கிலாறு கிராமத்தினை சேர்ந்த 13 வயதுச் சிறுமி கடந்த 15ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த நிலையில், இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த 15 ஆம் திகதி முதல் குறித்த சிறுமியை காணவில்லை என புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் பெற்றோரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த சிறுமி இன்று மூங்கிலாறு 200 வீட்டுத்திட்டம் பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி வருகைதந்து பார்வையிட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.

இதேவேளை குறித்த சிறுமி திருகோணமலையில் விடுதியில் தங்கி நின்று படிப்பதாகவும் காணாமல் போவதற்கு இரண்டு நாட்களுக்க முன்னரே வீட்டிற்கு வந்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button