இலங்கைசெய்திகள்
Trending

இளைஞர்களில் ஒருவர் முல்லைத்தீவு கடலில் சடலமாக மீட்பு!

death

முல்லைத்தீவு கடலில் நீராடச் சென்ற நிலையில் காணாமல்போன 3 இளைஞர்களில் ஒருவர் இன்று(05) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அதேவேளை காணாமல்போன மேலும் இரண்டு இளைஞர்களை தேடும் பணிகளில் கடற்படையினரும் காவற்துறையினரும் ஈடுபட்டுள்ளனர்.

25 முதல் 26 வயதுடைய குறித்த இளைஞர்கள் வவுனியாவில் இருந்து முல்லைத்தீவு கடல் பகுதிக்கு சென்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து இன்று பிற்பகல் குறித்த மூன்று இளைஞர்களும் கடலில் நீராடச் சென்றிருந்தவேளை காணாமல்போனதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button