![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2021/12/IMG-b5021631f8d94725ead4d86be4f1a6da-V.jpg?resize=708%2C399&ssl=1)
வவுனியா, ஈரப்பெரியகுளத்தில் இன்று (04) பிற்பகல் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2021/12/IMG-47de5c7638b659db0c9f1c209e27ad49-V.jpg?resize=708%2C399&ssl=1)
குறித்த விடயம்குறித்து மேலும் தெரியவருவதாவது,
தனது வீட்டில் இருந்து வவுனியா, ஈரப்பெரியகுளம் குளத்திற்கு மீன் பிடிப்பதற்காக சென்றவரே இன்றையதினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2021/12/IMG-62fd7d1006d4caee768581288d56324f-V.jpg?resize=708%2C399&ssl=1)
குறித்த குளத்தில் மீன் பிடிப்பதற்காக காலையில் இருவர் சென்றதாகவும் திடீரென அங்கு மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது ஒருவர் தனக்கு இயலாமல் இருக்கின்றது எனக் கூறி குளத்தில் இருந்து வெளியே வீட்டுக்கு செல்வதாக கூறி சென்றுள்ளார்.
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2021/12/IMG-1473a3fe03f414eb1d0011d2a646146e-V.jpg?resize=708%2C399&ssl=1)
மற்றைய நபர் மீன் பிடித்து முடிந்ததும் வீடு நோக்கி சென்ற போது குளத்தின் அருகாமையில் இருந்த ஒழுங்கை ஒன்றில், இயலாது இருப்பதாக கூறிவிட்டு சென்ற நபர் மரணித்த நிலையில் காணப்பட்டதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2021/12/IMG-20211204-WA0005.jpg?resize=708%2C531&ssl=1)
இச் சம்பவத்தில் வவுனியா, கல்நாட்டினகுளம் ,மதுரா நகர் பகுதியை சேர்ந்த 61 வயதுடைய செல்வராசா ஜெயகுலராசா என்பரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2021/12/IMG-20211204-WA0007.jpg?resize=708%2C531&ssl=1)
இச் சம்பவம் குறித்து ஈரப்பெரியகுளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2021/12/IMG-b5021631f8d94725ead4d86be4f1a6da-V-1.jpg?resize=708%2C399&ssl=1)
செய்தியாளர் கிஷோரன்