இலங்கைசெய்திகள்

இலங்கையின் முதலாவது தமிழ் பெண் ஜனாதிபதி சட்டத்தரணி காலமானார்!!

Death

 இலங்கையின் முதல் தமிழ் பெண் ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்னசிங்கம்  (வயது 77 ) காலமானார். 

இத்தகவலை அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர். இவர்,   இலங்கையின் முதல் தமிழ் பெண் ஜனாதிபதி சட்டத்தரணி என்பதுடன் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் வட மாகாணத்திற்கான தலைவராகவும் செயற்பட்டதுடன், 

யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவியாக நீண்டகாலம் இருந்து யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நீதிமன்றங்களின் மேம்படுத்தல்களிலும் சட்டத்தரணிகளின் நலன்களிலும் அக்கறையுடன் செயற்பட்டவராவார்.

Related Articles

Leave a Reply

Back to top button