![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2023/03/23-641c608951760.jpeg?resize=600%2C400&ssl=1)
முல்லைத்தீவு கொல்லவிளாங்குளம் பகுதியில் மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று (23.03.2023) இடம்பெற்றுள்ளது.
முற்றத்தில் வெளிச்சம் போடுவதற்காக வீட்டிலிருந்த மின்சாரம் எடுக்கப்பட்டிருந்த நிலையில், மின்சார வயரினை பிடித்த வேளையிலேயே குறித்த பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருப்பதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
38 வயதான இந்தப் பெண்ணுக்கு திருமணமாகி ஐந்து மாதங்களே ஆகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகள் பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.