Breaking Newsஇலங்கைசெய்திகள்

பல்கலைக்கழக மாணவி மர்ம மரணம்!!

death

பேராதனை பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் 4ஆம் வருட மாணவி ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

குருநாகல், ரிதிகம பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய குறித்த மாணவி நேற்று இரவு சுகயீனம் காரணமாக பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

மாணவி உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தநிலையில், அவருக்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்தை அளவுக்கு அதிகமாக உட்கொண்டாரா என்பது குறித்து மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, திறந்த முடிவு வழங்கப்பட்டதை அடுத்து, உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button