இலங்கைசெய்திகள்

நோய் காரணமாக இராணுவச் சிப்பாய் மரணம்!!

death

நேற்றைய தினம் (29-08-2022) யாழ். கீரிமலை இராணுவ முகாமில் கடமையாற்றிய இராணுவச் சிப்பாய் ஒருவர் எலிக்காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

யாழ். கீரிமலை இராணுவ முகாமில் கடமையாற்றி வரும் இராணுவச் சிப்பாய் கடந்த 22-ம் திகதி எலிக்காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில், முன்னதாக யாழ்ப்பாணம் பலாலி இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

மேலதிக சிகிச்சைக்காக கடந்த 25ஆம் திகதி யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

Leave a Reply

Back to top button