இலங்கைசெய்திகள்

மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு!!

Death

11 வயதுச் சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மல்வத்தவல வித்தியாலயத்தில் தரம் 6இல் கல்வி கற்று வந்த ஆர்.எம்.நுவன் நெத்சர என்ற சிறுவனே வெல்லவாய கொட்டவெஹெரகல பிரதேசத்தில் உறவினர் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது இவ்வாறு உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

விளையாடிக் கொண்டிருந்த போது, ​​அருகில் உள்ள துடைப்பம் அருகே போடப்பட்டிருந்த மின் கம்பியில் சிக்கி இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.  

Related Articles

Leave a Reply

Back to top button