இலங்கைசெய்திகள்

கொல்லப்பட்ட ஆயிஷாவின் பிரேத பரிசோதனை இன்று- – 30 பேரிடம் வாக்குமூலம்!!

death

(நமது விசேட செய்தியாளர்)

கடத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட பண்டாரகம – அட்டுலுகம சிறுமி பாத்திமா ஆயிஷாவின் மரண பரிசோதனைகள் பண்டாரகம ஆதார வைத்தியசாலையில் இன்று இடம்பெறவுள்ளது.

அத்துடன் சிறுமியின் கொலை தொடர்பில் பல தரப்பினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் 5 பொலிஸ் குழுக்கள் என்பன விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.

இதற்கமைய குறித்த பகுதியில் உள்ள சி.சி.ரி.வி. காணொளி காட்சிகள் பரிசோதிக்கப்படுவதோடு போதைப்பழக்கத்துக்கு உள்ளானவர்கள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அத்துடன் தொலைபேசி அலைவரிசைகளும் பரிசோதிக்கப்படுகின்றன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 27ஆம் திகதி காணாமல்போயிருந்த சிறுமி பாத்திமா ஆயிஷா அக்ரம், மறுநாள் தமது வீட்டுக்கு அருகில் உள்ள சதுப்பு நிலம் ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் தற்போது குடும்ப உறுப்பினர்கள் உட்பட 30 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button