இலங்கைசெய்திகள்

இருவர் சட்டவிரோத மின் இணைப்பில் சிக்கி பலி!

dead

இரத்தினபுரி, பெல்மதுளை – பட்டலந்தைப் பகுதியில் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

பயிர்ச்செய்கை நிலமொன்றில், அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத மின் இணைப்பில் சிக்கி இவ்விருவர் பலியாகினர்.

இந்தச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

மேற்படி இருவரும், சட்டவிரோத அகழ்வுப் பணியில் ஈடுபடுவதற்காக சென்றபோது, இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர்கள் பட்டலந்தை பகுதியைச் சேர்ந்த 28 மற்றும் 38 வயதுடையவர்கள் என காவல்துறை குறிப்பிட்டுள்ளது

Related Articles

Leave a Reply

Back to top button