![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2021/11/741109.jpg?resize=605%2C339&ssl=1)
கொரோனா தொற்று உறுதியான மேலும் 210 பேர் இன்று (28) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
முன்னதாக இன்று (28) கொவிட் தொற்றாளர்கள் 532 பேர் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
அதன்படி இன்று (28) கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 742 ஆக உயர்வடைந்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 562,520 ஆக அதிகரித்துள்ளது.