செய்திகள்விளையாட்டு

ஆஸி அணியின் முக்கிய வீரருக்கு கொரோனா!

covid19

அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் அடம் சம்பா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

இன்று (25) இலங்கைக்கு எதிரான போட்டியில் அவர் இணைவாரா இல்லையா என்பது தொடர்பில் இதுவரை எவ்விதமான தகவல்களும் வெளியாகவில்லை.

இலங்கை – அவுஸ்திரேலியா இருபதுக்கு உலகக் கோப்பை போட்டி பெர்த்தில் நடைபெறுகிறது.

அடம் சம்பாவுக்கு லேசான அறிகுறிகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் சமீபத்தில் இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அயர்லாந்து அணியின் ஜோர்ஜ் டோக்ரெல் விளையாடினார்.

Related Articles

Leave a Reply

Back to top button