இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

ரூபவாகினி தொலைக்காட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர் போராட்டக்காரர்கள்!!

Colombo

போராட்டகாகாரர்கள் தேசிய தொலைக்காட்சிக் கூட்டுத்தாபனத்தைச் சுற்றி ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும், இந்தப் போராட்டங்கள் காரணமாக அவர்களின் ஒளிபரப்பு நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் தொலைக்காட்சிக் கழகத்தின் நேரடி நிகழ்ச்சி ஒன்றில் இணைவதற்கான வாய்ப்பையும் அவர்கள் கோரியதாகவும், அதன்படி போராட்டத்தில் ஈடுபட்ட இருவருக்கு அதிகாரிகள் வாய்ப்பளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தற்போது, ​​தொலைக்காட்சிக் கழகத்தின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இன்று (2022/07/13) நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவதால், முதன்முறையாக, இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல் – பிரபா அன்பு

Related Articles

Leave a Reply

Back to top button