இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

கொழும்பில் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம்!!

Colombo

அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி இன்று கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று ஐக்கிய மக்கள் சக்தியினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஒன்றினைந்த அரசாங்கத்தை விரட்டுவோம் என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் பெருந்திரளான ஆதரவாளர்கள் பங்கேற்றுள்ளதாக கூறப்படுகிறது.

அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாக மக்கள் தொடர்ச்சியாக பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அத்துடன், ஜனாதிபதியும், பிரதமரும் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டம் கொழும்பு – கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button