![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/04/viber_image_2022-04-21_04-31-00-141-1024x576.jpg?resize=708%2C398&ssl=1)
மதுரங்குளிய பிரதேசத்தில் பெற்றோல் கோரி ஆர்ப்பாட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளமையால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. புத்தளம் – கொழும்பு வீதியை மதுரங்குளிய நகரத்திலிருந்து மூடுவதற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
இதை தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் நிலவியதுடன், பெருமளவான மக்கள் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.