இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி இல்லம் முற்றுகை- நடந்தது என்ன!!

Colombo

நேற்றைய தினம் இரவு வேளையில் ஜனாதிபதியின் இல்லத்திற்கு முன்னால் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் தீவிரவாத குழுவும் இணைந்து வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

இரும்புக் கட்டைகள், பொல்லுகள் மற்றும் ஆயுதம் ஏந்திய கும்பல், ஆர்ப்பாட்டக்காரர்களை தூண்டிவிட்டு மிரிஹான பங்கிரிவத்தையில் உள்ள ஜனாதிபதியின் இல்லத்தை நோக்கி பேரணியாகச் சென்று கலவரத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும் சமூக ஊடகங்களை அநாமதேயமாகப் பயன்படுத்தி மக்களைத் தூண்டிவிட்டு நாட்டைச் சீர்குலைக்கும் நோக்கில் இந்தக் கலவரம் நடத்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

கலவரத்தில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டதாகவும் பலர் தீவிரவாதிகள் என அடையாளம் காணப்பட்டதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button