![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/03/1.jpg?resize=698%2C399&ssl=1)
நாட்டில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி நுகேகொடை – மிரிஹான – பெங்கிரிவத்தை பகுதியில் மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
ஜனாதிபதியின் இல்லத்திற்கு செல்லும் வீதியில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரியவருகிறது. இதன் காரணமாக குறித்த பகுதியில் கடும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
நிலைமையைக் கட்டுப்படுத்த பெருமளவிலான பொலிஸார் குவிக்கப்பட்டு இராணுவ வீரர்களும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/03/2-1.jpg?resize=429%2C367&ssl=1)
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/03/4.jpg?resize=696%2C413&ssl=1)