இலங்கைசெய்திகள்

மண்ணெண்ணெய் வாங்கித் தருவதாக கூறி மூதாட்டியை ஏமாற்றிய இளைஞன்!!

Cheat

பொருளாதார நெருக்கடி மக்களை எவ்விதமாக மாற்றியுள்ளது என்பதை நினைத்தால் மனம் கலங்குகின்றது.

யாழ்ப்பாணத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நபரொருவர் மண்ணெண்ணெய் வாங்கித் தருவதாகக் கூறி வயோதிபப் பெண்ணிடம் 1000 ரூபாய் பணத்தை வாங்கிக்கொண்டு காணாமல் போய்விட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவது,
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் நின்ற வயோதிப பெண்ணிடம் , வரிசையில் சிரமப்படவேண்டாம், நான் மண்ணெண்ணெய் வாங்கி வந்து தருகிறேன், எனக்கேட்டுள்ளார். அவரும் உண்மையென நம்பி அந்த நபரிடம் 1000 ரூபாய் பணத்தையும், போத்தலையும் கொடுத்துள்ளார். மேற்படி நபர் கூடிநின்றவர்களினூடாக நழுவித் தப்பியோடியுள்ளார்.

நீண்ட நேரமாக மண்ணெண்ணைக்காகக் காத்திருந்த பெண், தான் காசு கொடுத்த இளைஞரைக் காணாது, ஏமாற்றத்துடன் அங்கிருந்தவர்களிடம் நடந்த சம்பவத்தைக் கூறிவிட்டு வீடு திரும்பியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button