இலங்கைசெய்திகள்

மறுகா இன் ஏற்பாட்டில் “விடாய்” கவிதை நூல் வெளியீட்டு விழா!!

Book Launch Ceremony

30.01.2022 நாளை {ஞாயிற்றுக்கிழமை} மட்டக்களப்பு நூலகர் கேட்போர் கூடத்தில் மு. ப 9. 55க்கு மறுகாவின் ஏற்பாட்டில் கவிஞர் தில்லை அவர்களின் “விடாய்” கவிதை நூல் வெளியீட்டுவிழா நடைபெறவுள்ளது.
இந்நிகழ்விற்கு திருமதி. ரூபி வலன்ரினா பிரான்ஸிஸ் { சிரேஷ்ட விரிவுரையாளர் , கிழக்கு பல்கலைக்கழகம் } அவர்கள் தலைமை தாங்கவுள்ளார்.

மேலும், அதிதிகளாக, பேராசிரியர் அம்மன்கிளி முருகதாஸ், டொக்ரர் புஸ்பலதா லோகநாதன் { கவிஞர் மலரா} , எழுத்தாளர் இந்திராணி புஸ்பராசா, சட்டத்தரணி மங்களேஸ்வரி சங்கர் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
நூலின் முதல் பிரதியினை டொக்ரர் கே . முரளிதரன் பெற்றுக்கொள்ளவுள்ளார். விமர்சன உரைகளை கவிஞர் வாசுதேவன், கவிஞர் .த. உருத்திரா ஆகியோரும் நன்றியுரையினை கவிஞர் சுதாகரி மணிவண்ணனும் ஆற்றவுள்ளனர்.

படைப்பாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அனைவரையும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு விழா ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

தகவல் – காரையன் கதன்

Related Articles

Leave a Reply

Back to top button