Breaking Newsஇலங்கைசெய்திகள்

கட்டைவேலி பொது நூலகத்தில் நடைபெறவுள்ள புத்தகக் கண்காட்சி!!

Book faire

 தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு, வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் கட்டைவேலி  பொதுநூலகத்தின் ஏற்பாட்டில் “எங்கட புத்தகங்கள் ” ஊடாக இடம்பெறும் புத்தக கண்காட்சி 06.11.2023 (இன்று) கட்டைவேலி பொது நூலக அரங்கில் நடைபெறவுள்ளது.

தமிழ் படைப்பாளர்கள்  பலரின் புத்தகங்களும் சிறுவர்களுக்கான புத்தகங்களும் ஆங்கில படைப்புகளும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 

புத்தகங்கள் காலத்தின் கண்ணாடிகள். 

வாசிக்க மறுப்பவர்கள் வாழ்க்கையை வெறுப்பவர்கள் என்பதே யதார்த்தம். 

எனவே, இலக்கிய ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர்கள் இக் கண்காட்சியில் கலந்து கொண்டு படைப்பாளர்களைப் பலப்படுத்த வேண்டும் என நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

Related Articles

Leave a Reply

Back to top button