இலங்கைசெய்திகள்

யாசகர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு!!

Beggars

கடந்த இரண்டு மாதங்களில் கொழும்பு வீதிகளில் யாசகம் பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வெளிப் பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே அதிகமானோர் உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு நகரில் மாத்திரம் தற்போது சுமார் 300 யாசகர்கள் யாசகம் பெறுவதாக கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை மேல் மாகாணத்தில் மட்டும் 671 யாசகர்கள் தற்போது யாசகம் பெற்று வருகின் றனர்.

ஒரு மாதத்தில் கொழும்பில் மாத்திரம் சுமார் 10 யாசகர்களின் மரணங்கள் பதிவாகியுள்ளதாக கொழும்பு மாநகர மேலதிக மரண விசாரணை அதிகாரி இரேஷா சமரவீர தெரிவித்துள்ளார்.

இந்த இறப்புகளில் தொண்ணூற்றொன்பது சதவீதமானோருக்கு உறவினர்கள் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button