![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/02/Mahintha-691x375-1.jpg?resize=691%2C375&ssl=1)
74 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு அனைத்து மதுபான சாலைகள் மற்றும் இறைச்சி விற்பனை நிலையங்கள் மூடப்படவுள்ளன.
உள்விவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிவித்தலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நாளை மறுதினம் (04) குறித்த வர்த்தக நிலையங்கள் மூடப்படவுள்ளன.
இதேவேளை, 74 ஆவது சுதந்திர தின விழா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் நாளை மறுதினம் நடைபெறவுள்ளது.