![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2021/12/1612928925-Badulla-2.jpg?resize=650%2C433&ssl=1)
பதுளை மாநகர சபையின் அடுத்த ஆண்டுக்கான பாதீடு இன்று (14) வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.
எனினும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் இது நிறைவேற்றப்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது.
அனைத்து உறுப்பினர்களின் முன்மொழிவுகள் மற்றும் திருத்தங்களை தாம் ஏற்றுக்கொண்டதாக மாநகர முதல்வர் தெரிவித்தார்.
இதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்டுப்பாட்டில் உள்ள மாத்தளை – யடவத்தை பிரதேச சபையின் அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டம் 16 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.