இலங்கைசெய்திகள்

பிரேசில் யுவதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!!

arrested

‘இன்டபோல்’ எனப்படும் சர்வதேச காவல்துறையினால் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் ‘சிவப்பு அறிவித்தல்’ பிறப்பிக்கப்பட்டிருந்த பிரேசில் நாட்டை சேர்ந்த யுவதி ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

23 வயதான குறித்த பெண்ணை பிரேசில் காவல்துறையினர் கைதுசெய்வதற்கான ஆயத்தங்களை முன்னெடுத்திருந்தபோது, அவர் தாய்லாந்துக்கு தப்பிச்சென்றுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் முன்னெடுத்த விசாரணையில் தெரியவந்துள்ளது.

எனினும், நீண்ட காலம் நாட்டில் தங்கியிருக்கும் நோக்கில் குறித்த சந்தேக நபர் தாய்லாந்தில் இருந்து சிங்கப்பூர் ஊடாக இலங்கைக்கு வந்துள்ளார்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபரான பெண்ணை குடிவரவு – குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் மீண்டும் பிரேசிலுக்கு நாடு கடத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button