இலங்கைசெய்திகள்

போதைப்பொருளுடன் யாழில் பெண்கள் இருவர் கைது!!

Arrest

யாழ்ப்பாணத்தில் பாழடைந்த வீடொன்றில் மறைந்திருந்து போதைப்பொருளை பயன்படுத்திக் கொண்டிருந்த இரு பெண்களை யாழ்ப்பாணப் பொலிஸார் கைது செய்துள்ளதுடன் அவர்களிடம் இருந்து 2 கிராம் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம்-பொம்மைவெளி பகுதியில் உள்ள கைவிடப்பட்ட வீடொன்றில் நேற்று (29) இரவு பெண்கள் போதைப்பொருளை நுகர்வதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார் அங்கு போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இரு பெண்களைக்கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்கள் இருவரும் 28 மற்றும் 29 வயதுடையோர் எனவும் , அவர்களை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button