சினிமாசெய்திகள்

திருமண வாழ்க்கை குறித்து கருத்து தெரிவித்த ஐஸ்வர்யா!!

Aishwarya Dhanush

தனுஷ்- ஐஸ்வர்யா இருவரும் தங்களது 18 வருட திருமண வாழ்க்கையிலிருந்து பிரிவதாக சில நாட்களுக்கு முன்பு அறிவித்தனர்.

இந்த பிரிவு தனுஷ் ரசிகர்களையும் திரைத்துறையினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இயக்குநர் ஐஸ்வர்யா, நடிகர் தனுஷை வைத்து 3 என்ற திரைப்படத்தையும், கௌதம் கார்த்திக்கை வைத்து வை ராஜா வை என்ற திரைப்படத்தையும் இயக்கியுள்ளார்.

இந்நிலையில் ஐஸ்வர்யா அவருடைய திருமண பிரிவை பற்றி அண்மைய நேர்காணல் ஒன்றில் கூறியிருப்பது, “வாழ்க்கையை நாம் சமாளிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். நம் வழியில் வரும் அனைத்தையும் நாம் சமாளிக்க வேண்டும். இறுதியில், நமக்கென்று என்ன இருக்கிறதோ அது நம்மிடம் வரும்” என்று பகிர்ந்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button