செய்திகள்விளையாட்டு

சிங்கப்பூர் அணி AFF Suzuki கிண்ணப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது!!

AFF Suzuki

AFF Suzuki கிண்ணப் போட்டியில் சிங்கப்பூர் அணியினர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாகக் கூறிப் பிரதமர் லீ சியென் லூங் பாராட்டியுள்ளார்.

சிங்கப்பூர் அவர்களை எண்ணிப் பெருமை கொள்வதாகப் பிரதமர் தமது Facebook பதிவில் குறிப்பிட்டார்.
பல்வேறு சிரமங்களையும்மீறி சிங்கப்பூர் விளையாட்டாளர்கள், வலுவான தற்காப்புடன் ஆடியதாகத் திரு. லீ குறிப்பிட்டார்.

இரண்டாம் சுற்று அரையிறுதி ஆட்டத்தில் சிங்கப்பூர் நேற்றிரவு, நான்குக்கு இரண்டு என்னும் கோல் எண்ணிக்கையில், இந்தோனேசியாவிடம் வெற்றியைப் பறிகொடுத்தது.

AFF Suzuki கிண்ணக் காற்பந்து இறுதிப் போட்டியில் இந்தோனேசியா தாய்லந்து அல்லது வியட்நாமைச் சந்திக்கும்.

இன்றிரவு எட்டரை மணிக்கு, சிங்கப்பூர்த் தேசிய விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ள அரையிறுதி ஆட்டத்தில் தாய்லந்தும் வியட்நாமும் சந்திக்கவுள்ளன.

Related Articles

Leave a Reply

Back to top button