இலங்கைசெய்திகள்

மூன்று தூதரகங்களை மூட வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை!!

Action to close three embassies

அலுவலகங்களை நிர்வகிக்க ஏற்படும் செலவினங்களை குறைப்பதற்காகஇ ஜேர்மனியின் ஃபிராங்ஃபர்ட் (frankfurt) நகரில் உள்ள துணைத் தூதரகம் மற்றும் சைப்ரஸிலுள்ள துணைத் தூதரகம் என்பவற்றை மூடுவதற்கு வெளிவிவகார அமைச்சு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் நைஜீரியாவில் உள்ள இலங்கை தூதரகத்தையும் மூடுவதற்குத் தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது.

ஐரோப்பிய நாடுகளில் உள்ள இரு துணைத் தூதரகங்களை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன்இ நைஜீரியாவில் நிலவும் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாகவே அங்குள்ள தூதரகத்தை மூட தீர்மானிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளைஇ வெளிநாடுகளில் உள்ள இலங்கையின் தூதரகங்கள் மற்றும் துணைத் தூதரகங்களின் பராமரிப்பு மற்றும் பணியாளர்களின் கொடுப்பனவு செலவுகள்இ 11 பில்லியன் ரூபாவை தாண்டும் என 2021 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button