![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/02/22-6213e72f8288c.jpg?resize=600%2C400&ssl=1)
ருமேனியாவின் ஹொரியா பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் ருமேனியாவில் பணியாற்றிவந்த இலங்கையைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
குறித்த இருவரும் வீதியோரமாக நடந்துசென்றுகொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த மகிழுந்து எதிரில் வந்த அவர்களை மோதியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர்கள், பிலியந்தலையைச் சேர்ந்த அசேல பண்டார (42) மற்றும் பேருவளையைச் சேர்ந்த கயான் சம்பத் (39) ஆகியோரென அடையாளம் காணப்பட்டுள்ளனர்.