இலங்கைசெய்திகள்

வவுனியா விபத்தில் பெண் படுகாயம்!

வவுனியா, திருநாவற்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இன்று மாலை இடம்பெற்ற இந்த விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, குருமன்காடு – திருநாவற்குளம் பிரதான வீதியில் மோட்டர் சைக்கிள் ஒன்றில் பெண் ஒருவர் சென்று கொண்டிருந்தபோது, ரயில் பாதை ஊடாக ரயில் சென்றுள்ளது.

இதன்போது ரயில் பாதைப் பகுதியை அண்மித்து மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த மாடுகள் ரயில் சத்தம் காரணமாக சிதறி ஓடியபோது வீதியால் சென்ற குறித்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தில் மோட்டர் சைக்கிளில் பயணித்த பெண் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பில் வவுனியா வைத்தியசாலைப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button