இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

இன்றைய பத்திரிகையில் (14.10.2024 – திங்கட்கிழமை ) முன்பக்கத்தில் இடம்பிடிக்கக் கூடிய செய்திகள் சுருக்கமாக ஒரே பார்வையில்!!

News

1. 

அரசியல் ஓய்வு என்பதை  அறிமுகப்படுத்தியுள்ளவர்கள் நாமே – ஜனாதிபதி தெரிவிப்பு!!

இலங்கையில்,  அரசியல் ஓய்வு என்கிற வார்த்தையே தேசிய மக்கள் சக்தியே அறிமுகப்படுத்தியுள்ளது என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

2.

போலி தமிழ் தேசிவாதிகளை மக்கள் நிராகரிக்கவேண்டும்!!

தமிழ் தேசியம் பேசும் போலி அரசியல்வாதிகளையும் போதைப்பொருள் வியாபாரிகளையும் மக்கள் நிராகரிக்க வேண்டும் என தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

3.

இலங்கையில் பெருகும் வாய்ப்புற்றுநோய் அபாயம்!!

இலங்கையில் வாய்ப்புற்றுநோய் மற்றும் மார்பக புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

4.

மாவை பங்கேற்கவில்லை!!

தமிழரசு கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட தேர்தல் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் மா.வை. சேனாதிராசா பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

5.

ஈ.பி.டி.பி. வேட்பாளர்களில் இருவர் தேரர்கள்!!

ஈழமக்கள் ஜனநாயக கட்சி வேட்பாளர்களில் இருவர் தேரர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர் – சமர்க்கனி

Related Articles

Leave a Reply

Back to top button