இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

இன்றைய (07.07.2024 – ஞாயிற்றுக் கிழமை) பத்திரிகையில் முன்பக்கத்தில் இடம்பிடிக்கக் கூடிய செய்திகள்!!

News

 1.

மின்சாரம் தொடர்பான இந்திய இலங்கை பேச்சு இறுதிக்கட்டத்தில்!!

இந்தியா இலங்கை இடையே கடல் வழியாக கேபிள்கள் மூலம் மின்சாரத்தை பகிரும் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக அரச உயர மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 

2.

ஜ. தே. க  கட்சி,  முஸ்லீம்  கட்சிகளின் தலைவர்களுடன் இரகசிய பேச்சு!!

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முஸ்லீம் கட்சிகளுடன் இரகசிய பேச்சுக்களில் ஈடுபடுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. 

3.

பிரித்தானியாவின் புதிய தலைவரால் தமிழீழம் மலருமாம்!!

பிரித்தானியாவில் புதிதாக தற்போது ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கும் தொழிற்கட்சியின் புதிய பிரதமரான கியர் ஸ்ராமர் இலங்கையில் ஈழக்கனவை நனவாக்கி விடுவார் என சிங்கள வார இதழ் ஒன்றின் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

4.

யாழ்.  மாவட்ட முன்னாள் அரச அதிபர் மரணம்!!

முன்னாள் யாழ் மாவட்ட அரச அதிபராகக் கடமையாற்றிய லயனல் பெர்ணாண்டோ தனது 90வது வயதில் காலமாகியுள்ளார். 

5.

தென்மராட்சிப் பிரதேசத்தில் கதவடைப்புக்கு அழைப்பு!!

தென்மராட்சி பிரதேசத்தின் பதில் மருத்துவ அத்தியாட்சகரை இடமாற்றம் செய்ய மேற்கொள்ளப்படும் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை திங்கட்கிழமை தென்மராட்சி பிரதேசத்தில் கதவடைப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது. 

“தென்மராட்சி மக்கள்”  என்ற பெயரில் இந்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

செய்தியாளர் + சமர்க்கனி

Related Articles

Leave a Reply

Back to top button