இலங்கைசெய்திகள்

யாழ். இந்து ஆரம்ப பாடசாலை தரம் 5 மாணவர் கௌரவிப்பும் பிரிவுபசார விழாவும்!!

Award Ceremony

17.04.2022 ஞாயிற்றுக்கிழமை யாழ்.இந்து ஆரம்பப்பாடசாலையில் 2022 புலமைப்பரிசில் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான பாராட்டுவிழாவும் பிரிவுபசார நிகழ்வும் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது. பிரியாவிடைக்குழுத் தலைவர் மனோரஞ்சிதன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்
அதிபர் – யா / குளமங்கால் றோமன்கத்தோலிக்க வித்தியாலயம் மற்றும் முன்னாள் யா / இந்து ஆரம்ப பாடசாலை அதிபருமான உயர்திரு நா. மகேந்திரராசா அவர்களும் யா/ யாழ். இந்து ஆரம்ப பாடசாலை அதிபர் உயர்திரு பே. தனபாலசிங்கம் அவர்களும் விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

விருந்தினர் அழைப்பு, மங்கள விளக்கேற்றல், இறைவணக்கம் , ஆசியுரை எனத்தொடர்ந்து கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன. இந்நிகழ்வில் மாணவர்கள், பெற்றோர்கள் , நலன்விரும்பிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர். மாணவர்களின் பிரிவுபசார விழாவின் போது உயரப்பறக்கும் சிட்டுக்கள் என்ற நூலும் வெளியிடப்பட்டு மாணவர்கள்அனைவருக்கும் வழங்கிவைக்கப்பட்டது.

Related Articles

Leave a Reply

Back to top button