![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/03/GettyImages-457942384-56aa291a5f9b58b7d001246c-1024x729.jpg?resize=708%2C504&ssl=1)
இன்றைய தினம் கத்தோலிக்க பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் மிச்செல் பெச்சலட்டை சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வத்திக்கானுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பேராயர், அங்கிருந்து ஜெனிவாவுக்குப் பயணமாகி ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை ஆணையாளரைச் சந்திக்க உள்ளார்.
இதன்போது, ஏப்ரல் 21 தாக்குதல் குறித்த விசாரணைகளின் தற்போதைய நிலைமை உட்பட மேலும் பல விடயங்கள் குறித்து அவர், மனித உரிமைகள் ஆணையாளருடன் கலந்துரையாட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.