இலங்கைசெய்திகள்

சிறுமிக்கு எமனாக மாறிய குழை!!

death

ஆட்டிற்கு குழை வெட்டச் சென்ற சிறுமியொருவர் கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் கரணவாய் அண்ணாசிலையடிப் பகுதியில் நேற்று (18) மாலை 6.00 மணியளவில்  இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் 16 வயதான ஜெகன் கஜனிகா என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார். குறித்த சிறுமி, வீட்டில் வளர்க்கப்படும் ஆட்டிற்கு குழை வெட்டுவதற்காக  கிணற்றுக்கட்டில் ஏறி நின்று பூவரசம் குழை வெட்டிய போதே கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Back to top button