![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/01/palai-2.jpg?resize=600%2C316&ssl=1)
அநுராதபுரத்தில் இருந்து வவுனியா வரையான வடக்கு தொடருந்து பாதை அபிவிருத்தி பணிகளுக்காக 6 மாதங்களுக்கு மூடப்படும் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமையஇ 92 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் 120 கிலோமீற்றர் பகுதி அபிவிருத்தி செய்யப்பட உள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
தற்போது இந்த தொடருந்து பாதையில் தொடருந்துகள் ஒரு மணிநேரத்திற்கு சுமார் 80 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்கின்றன.
மஹவ தொடக்கம் ஓமந்தை வரையிலான பகுதியை அபிவிருத்தி செய்ததன் பின்னர் தொடருந்துகள் ஒரு மணிநேரத்திற்கு சுமார் 100 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.