![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/01/f2.jpg?resize=500%2C333&ssl=1)
புத்தாண்டின் முதலாவது திறைசேரி உண்டியல் ஏல விற்பனை எதிர்வரும் 5ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
இதன்போது 74,500 மில்லியன் ரூபா பெறுதியான உண்டியல்கள் ஏலமிடப்படவுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்டுள்ள 25,000 மில்லியன் ரூபா பெறுமதியான உண்டியல்களும், 182 நாட்கள் முதிர்வுக் காலத்ததைக் கொண்டுள்ள 28,000 மில்லியன் ரூபா பெறுமதியான உண்டியல்களும் ஏலமிடப்படவுள்ளன.
அத்துடன், 364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 21,500 மில்லியன் ரூபா பெறுமதியான உண்டியல்களும் ஏலமிடப்படவுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.