![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2021/12/WhatsApp-Image-2021-12-24-at-09.51.15.jpeg?resize=708%2C370&ssl=1)
தரம் 5 மாணவர்களின் நலக் கருதி ஐவின்ஸ்தமிழ் இணையதளம் ஒன்றிணைத்த எமது வட்ஸ்அப் குழுமத்தில் 1000 மாணவர்கள் இணைக்கப்பட்டிருந்த போதும் பாடசாலைகளில் இறுக்கமான கட்டுப்பாடுகளுடன் வகுப்புகள் நடைபெறுவதால் அத்தொகையின் குறிப்பிட்டளவு மாணவர்களே கருத்தரங்கில் பங்குபற்றிவருகின்றனர். கருத்தரங்கில் பங்குபற்ற முடியாமை தொடர்பில் பலர் வருத்தம் தெரிவித்துள்ளமையினாலும் தாம் இணைந்துகொள்வதற்காக ஏதாவது வழி செய்யுமாறும் கேட்டிருந்தமைக்கமைவாக அம் மாணவர்களின் வசதியையும் முன்னிட்டு எதிர்வரும் திங்கள் செவ்வாய் புதன் வியாழன் ஆகிய நாட்களில் மாலை 7 மணி தொடக்கம் 9.30 வரை கருத்தரங்கை நடாத்த திட்டமிட்டுள்ளோம்.
மேலும் 27. 28ம் ஆகிய ஆசிரியர் தீபன் அவர்களின் கற்பித்தல் திகதிகளில் ஆசிரியர் திலீப் அவர்களின் கற்றல் முன்னெடுக்கப்படும் என்பதையும் மாணவர்கள் பெற்றோர்களுக்கு அறியத்தருகின்றோம். வேறு தகவல்கள் மாற்றங்கள் இருப்பின் குழுவிலோ அல்லது இணையதளத்திலோ பதிவிடுகின்றோம்.