![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2021/12/202112101423485032_1_aa-2._L_styvpf.jpg?resize=615%2C350&ssl=1)
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அல்லு அர்ஜுன் – ரஷ்மிகா மந்தனா நடித்துள்ள புஷ்பா திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்னரே 250 கோடி ரூபா (இந்திய நாணய மதிப்பில்) வசூல் சாதனை படைத்துள்ளது.
புஷ்பா படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது.இப்படத்தில் பகத் பாசில் ஐபிஎஸ் அதிகாரியாக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் வெளியாக உள்ளது. அண்மையில் புஷ்பா படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இப்படத்தின் முதல் பாகம் எதிர்வரும் 17 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் இப்படம் வெளியாவதற்கு முன்பே சாட்டிலைட், திரையரங்கு, ஆடியோ மற்றும் டிஜிட்டல் உரிமை விற்பனை மூலம் 250 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
அது தவிர இப்படத்தின் அனைத்து மொழிகளுக்குமான டிஜிட்டல் உரிமையைப் பிரபல ஓடிடி தளம் ஒன்று பல கோடி ரூபாவுக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.