இலங்கைசெய்திகள்

விளையாட்டு நிகழ்வு

கைதடி தென்கிழக்கு விநாயகர் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டுப்போட்டி எதிர்வரும் 01.05.2022 அன்று விநாயகர் முன்பள்ளியில் பி.ப 3.00 மணியளவில் இடம்பெறவுள்ளது.

விஸ்ணுதரன் சிவதீபா தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்விற்கு, முதன்மை விருந்தினராக கைதடி விக்கினேஸ்வரா வித்தியாலய அதிபர் நா.கருணாகரன் அவர்கள் கலந்து சிறப்பிக்க உள்ளார்.

மேலும், சிறப்பு விருந்தினர்களாக கைதடி தென்கிழக்கு கிராம அலுவலர் சிவகுமார சர்மா, கைதடி தென்கிழக்கு பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் வரதராஜா காயத்திரி ஆகியோர் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.

கெளரவ விருந்தினர்களாக கைதடி முன்பள்ளிகளின் இணைப்பாளர் தனபாலசிங்கம் சுபத்திராதேவி, சாவகச்சேரி பிரதேசசபை உறுப்பினர் இராசேந்திரம் ஜானகி ஆகியோர் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.

அத்துடன் பாலர்களின் கண்ணைக்கவரும் விளையாட்டுப்போட்டிகள் இடம்பெறவுள்ளன.

Related Articles

Leave a Reply

Back to top button